சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் - தீர்மானம் நிறைவேற்றிய சாலைப்பணியாளர் சங்கம்.! - Seithipunal
Seithipunal


சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு விடும் அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் ஐந்தாவது கோட்ட பேரவை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டு, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு சிவகுமாரன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் செல்வராஜ், உட்கோட்ட செயலாளர் கருப்பன், மாநில துணைத்தலைவர் ராஜ மாணிக்கம், கோட்டச் செயலாளர் ராமன், கோட்டப்பொருளாளர் கருப்பன், துணை தலைவர் அம்மாசை, மாநில செயற்குழு உறுப்பினர் மணிவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த பேரவை கூட்டத்தில் முக்கியமாக சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும், பணியாளர்களில் தொழில்நுட்பக் கல்வி திறன் இல்லாத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

road workers committee


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->