சாலை மேம்பாட்டு பணிகள்..செயற்பொறியாளருடன் அனிபால் கென்னடி MLA ஆலோசனை! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, உப்பளம் தொகுதி பெரியபள்ளி, வீரர் வெள்ளி, வாணரப்பேட்டை பகுதிகளில் சாலை மற்றும் வாய்க்கால் மேம்பாட்டு பணிகள் ரூ.18.3 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இது தொடர்பாக பொதுபணிதுறை செயற்பொறியாளர் ஸ்ரீனிவாசன் அவர்களை சட்ட மன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று புஸ்ஸி வீதியில் ரூ.3 கோடி செலவில் சாலை மேம்பாட்டு பணியை பொது பணி துறை மேற்கொண்டது. இதனால் மழைநேரங்களில் நீர் தேங்கி நிற்கும் பிரச்சனை தீர்ந்ததைத் தொடர்ந்து, செயற் பொறியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் இளநிலை பொறியாளர் ராமன் ஆகியோருக்கு சட்டமன்ற உறுப்பினர் சால்வை அணிவித்து நன்றியினை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில், டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள செயின்ட் மத்தியாஸ் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள யு-வடிவ வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகள் மாணவ, மாணவிகளுக்கு இதனால் நேரடி பாதிப்பை ஏற்படுத்துவதாகும். எனவே, அதனை உடனடியாக தூர்வாரும் பணியில் ஈடுபட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

மேலும், காந்தி வீதி, சுப்பையா சாலை, ஆம்பூர் சாலை, பாரதிமில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள யு வடிவ வாய்க்கால்கள் மற்றும் துறைமுக இணைப்பு சாலையின் நேதாஜி நகர் பின்புற பகுதியில் பாதி விடுபட்ட சாலையைத் தொடர்ந்து அமைக்கவும், அதற்கேற்ப புதிய யு வடிவ வாய்க்காலும் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார் 

உப்பனாறு பாலம் கோலாஸ் நகர் அருகே அகலப்படுத்தி சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அப்துல் கலாம் குடியிருப்பு டைப்-1 பகுதியில் 4 குடியிருப்புகளுக்கான ரூ.1.25 கோடி மதிப்பிலான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.

பெரியபள்ளி வீரர் வெள்ளி பகுதியில் சாலை அமைக்கவும் குறிப்பாக வவுசி வீதி, மோரிசன் வீதி, அப்பாவு மேஸ்திரி வீதி, பாண்டியன் சந்து, லத்திப் சந்து, பொண்ணிய குட்டி வீதி, சந்தா சாகிப் வீதி, நைநியப்பா வீதி ஆகிய பகுதிகளில் முழுமையான சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் எனக் கேட்டார்.

வாணரப்பேட்டை பகுதியில் அலேன் வீதி, நேரு வீதி, பெருமாள் ராஜா வீதி, காளியம்மன் தோப்பு, முருகசாமி தோப்பு, சின்ன எல்லையம்மன் கோவில் வீதி, சித்திவிநாயகர் கோவில் வீதி, கஸ்தூரிபாய் வீதி, காமராஜர் வீதி, அப்துல் கலாம் வீதி உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை அமைக்கும் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்று, வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்யும் என்றும், மற்ற பணிகளும் விரைவாக தொடங்கப்படும் என்றும் உறுதியளித்தனர். ஆலோசனையில் தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் செல்வம், ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி, உப்பளம் தொகுதி பெரியபள்ளி, வீரர் வெள்ளி, வாணரப்பேட்டை பகுதிகளில் சாலை மற்றும் வாய்க்கால் மேம்பாட்டு பணிகள் ரூ.18.3 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இது தொடர்பாக பொதுபணிதுறை செயற்பொறியாளர் ஸ்ரீனிவாசன் அவர்களை சட்ட மன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று புஸ்ஸி வீதியில் ரூ.3 கோடி செலவில் சாலை மேம்பாட்டு பணியை பொது பணி துறை மேற்கொண்டது. இதனால் மழைநேரங்களில் நீர் தேங்கி நிற்கும் பிரச்சனை தீர்ந்ததைத் தொடர்ந்து, செயற் பொறியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் இளநிலை பொறியாளர் ராமன் ஆகியோருக்கு சட்டமன்ற உறுப்பினர் சால்வை அணிவித்து நன்றியினை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில், டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள செயின்ட் மத்தியாஸ் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள யு-வடிவ வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகள் மாணவ, மாணவிகளுக்கு இதனால் நேரடி பாதிப்பை ஏற்படுத்துவதாகும். எனவே, அதனை உடனடியாக தூர்வாரும் பணியில் ஈடுபட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

மேலும், காந்தி வீதி, சுப்பையா சாலை, ஆம்பூர் சாலை, பாரதிமில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள யு வடிவ வாய்க்கால்கள் மற்றும் துறைமுக இணைப்பு சாலையின் நேதாஜி நகர் பின்புற பகுதியில் பாதி விடுபட்ட சாலையைத் தொடர்ந்து அமைக்கவும், அதற்கேற்ப புதிய யு வடிவ வாய்க்காலும் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார் 

உப்பனாறு பாலம் கோலாஸ் நகர் அருகே அகலப்படுத்தி சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அப்துல் கலாம் குடியிருப்பு டைப்-1 பகுதியில் 4 குடியிருப்புகளுக்கான ரூ.1.25 கோடி மதிப்பிலான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.

பெரியபள்ளி வீரர் வெள்ளி பகுதியில் சாலை அமைக்கவும் குறிப்பாக வவுசி வீதி, மோரிசன் வீதி, அப்பாவு மேஸ்திரி வீதி, பாண்டியன் சந்து, லத்திப் சந்து, பொண்ணிய குட்டி வீதி, சந்தா சாகிப் வீதி, நைநியப்பா வீதி ஆகிய பகுதிகளில் முழுமையான சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் எனக் கேட்டார்.

வாணரப்பேட்டை பகுதியில் அலேன் வீதி, நேரு வீதி, பெருமாள் ராஜா வீதி, காளியம்மன் தோப்பு, முருகசாமி தோப்பு, சின்ன எல்லையம்மன் கோவில் வீதி, சித்திவிநாயகர் கோவில் வீதி, கஸ்தூரிபாய் வீதி, காமராஜர் வீதி, அப்துல் கலாம் வீதி உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை அமைக்கும் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்று, வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்யும் என்றும், மற்ற பணிகளும் விரைவாக தொடங்கப்படும் என்றும் உறுதியளித்தனர். ஆலோசனையில் தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் செல்வம், ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Road development works Consultation with the field engineer Anibal Kennedy MLA


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->