14 மற்றும் 9 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கைது - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் 14 மற்றும் 9 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் மளிகை கடை உரிமையாளர். இவருக்கு 14 மற்றும் 9 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இவர்கள் இரண்டு பேரும், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரான விஜயகுமார் (68) என்பவர் இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து சிறுமிகள் இதுகுறித்து தந்தையிடம் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் விஜயகுமாரை கைது செய்தனர். பின்பு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Retired BSNL employee arrested for sexually harassing 14 and 9 year old girls in kovai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->