பகலிலும் ஆம்னி பேருந்துகளை இயக்க தயார் - ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ந் தேதியான இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். இது குறித்து பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

இதை அடுத்து நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிலாளர் நல இணை கமிஷனர் எல்.ரமேஷ் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட்டது.

அதிலும், எந்த உடன்பாடும் ஏற்படாததால் அதுவும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து இன்று முதல் திட்டமிட்ட படி வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாகவும், சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் 15 ஆயிரம் பேருந்துகள் ஓடாது என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்த நிலையில், ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் அரசு கோரிக்கை வைத்தால் பகலிலும் ஆம்னி பேருந்துகளை இயக்க தயார் என்று தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ready to amni bus run in taminadu at day time


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->