தமிழகத்தில் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்!
Rajya Sabha elections in Tamil Nadu on June 19
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது..
தமிழகத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 6 எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ந்தேதியுடன் முடி வடைகிறது. இந்தநிலையில் இந்த காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.அதன்படி அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 9-ந்தேதி தொடங்கும். வேட்பு மனு பரிசீலனை ஜூன் 10-ந்தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு ஜூன் 12-ந்தேதி கடைசி நாளாகும். தேர்தல் ஜூன் 19-ந்தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அன்றைய தினமே மாலை 5 மணியளவில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது..
6 எம்.பி.க்களில்எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் தி.மு.க.வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 2 இடங்களும் உள்ளன.திமுக விடம் காங்கிரஸ் கட்சியும் ஒரு சீட்டை பெறும் முயற்சியில் உள்ளது.
இதேபோன்று, அ.தி.மு.க.வில் தே.மு.தி.க.வுக்கு ஒரு சீட் வழங்கப்படும் என முன்பே கூறப்பட்டது என பிரேமலதா கூறியுள்ளார்.
English Summary
Rajya Sabha elections in Tamil Nadu on June 19