#BigBreaking || அடுத்த 2 மணி நேரம் நேரம் நேரத்திற்கு., தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 8.00 மணி) 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் கனமழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

மேலும், இன்று கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் 15 மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு மணி நேரத்திற்கு (இரவு 8.00 மணி முதல் 10 மணிவரை), கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, விழுப்புரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, நெல்லை, தென்காசி, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAIN FALL IN 15 Districts


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->