ரயில்வே பாதையில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! போலீசார் விசாரணை!
Railway track fire accident Police investigation
சென்னை தாம்பரம்-கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் பாதையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
ரயில் பாதையில் இருந்து ஐந்து அடி தூரத்தில் வளர்ந்து கிடந்த புல் காய்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் தீ விபத்து தொடர்பாக போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ரயில் செல்லும் பொழுது தீ பரவ கூடும் என்பதால் மின்சார ரயில்கள் 20 நிமிடங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Railway track fire accident Police investigation