தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை.!
Raid more than sixty shawarma shops across tamilnadu
தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட ஷவர்மா கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டதால் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் அங்குள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால், அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள். தரமற்ற பொருட்கள் என்று சந்தேகிக்கப்பட்ட கடைகளிலிருந்து உணவுகளை பறிமுதல் செய்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 60க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கடைகளில் இருந்து தரமற்ற கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
English Summary
Raid more than sixty shawarma shops across tamilnadu