புதுச்சேரி ஆன்மீக தலமாக மாறும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் நம்பிக்கை..! - Seithipunal
Seithipunal


மதுரையில் எதிர்வரும் 22-ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முருக பக்தர்கள் மாநாட்டு  நடைபெறும் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் கோயில்களில் மாதிரியை நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சென்று வழிபட்டார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தமிழ்க் கடவுளான முருகனை தமிழர்கள் அதிகம் வழிபடுகின்றனர். எனது குலதெய்வம் முருகன்தான். வெளிநாடுகளுக்கு சென்றவர்கள்கூட முருகனை வழிபட்டு வருகின்றனர். சிறப்பாக நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

அத்துடன், புதுச்சேரி ஆளுநராக பதவி ஏற்றதும் தான் சென்ற முதல் இடம் முருகன் கோயில்தான் என்று குறிப்பிட்டார். அத்துடன்,  அந்தக் கோயிலை கட்டியவர் இஸ்லாமியர் என்றும், வெவ்வேறு தெய்வங்களை வழிபட்டாலும், நாம் அனைவரும் பண்பாட்டுரீதியில் சகோதரத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்றும் சுட்டிக்காட்டினார். 

மேலும், புதுச்சேரியில் மிகவும் பழமை வாய்ந்த கோயில்கள் மற்றும் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. புதுச்சேரியை ஆன்மிகத் தலமாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறோம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry Lieutenant Governor says we are trying to make Puducherry a spiritual destination


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->