நடைபயிற்சி சென்ற அரசு வழக்கறிஞருக்கு நேர்ந்த சோகம்! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர், அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 57) தி.மு.க பிரமுகரான இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 

இவரது மனைவி சுந்தர தேவி. இவர் அம்பத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். சம்பத்குமார் தினமும் அதிகாலையில் அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். 

அதுபோல் இன்று காலை 6 மணி அளவில் வழக்கம் போல் நடைபெறும் மழை பெய்ததால் அருகில் உள்ள இரும்பு இரும்பு பட்டறை தொழிற்சாலை வாசலில் ஒதுங்கினர். 

அப்போது அங்கு தொங்கிக் கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்ததை அறியாமல் சம்பத்குமார் அந்த மின் கம்பியை தொட்டதாக தெரிகிறது. 

இதில் சம்பத்குமார் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தாபமாக பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பத்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public prosecutor death Police investigation


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->