மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.. கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
Public grievance redressal meeting Immediate resolution on request petitions as instructed by the district collector
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் 532 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 532 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 125 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 69 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 89 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 60 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக
189 மனுக்களும் என மொத்தம் 532 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் தேசிய அறக்கட்டளை சட்டம் 1999 ன் கீழ் புற உலக சிந்தனையற்றோர், அறிவுசார் குறைபாடுடைய, மூளை முடக்குவாதம் மற்றும் பல்வகை பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளிகள் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாவலர் சான்றுகளும், மேலும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ. 1,86,000/-
மதிப்பீட்டில் நவீன செயற்கை கால் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் வழங்கினார்,
.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) பாலமுருகன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிசந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்,உஷாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Public grievance redressal meeting Immediate resolution on request petitions as instructed by the district collector