செயற்பொறியாளரின் முறைகேடுகளை கண்டித்து போராட்டம்!
Protest against the misdeeds of the engineer
பொன்னாபுரம் மின் பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளரின் முறைகேடுகளை கண்டித்து டிஎன்இபி எம்ப்ளாய்மென்ட் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை:பொன்னாபுரம் இயக்குதல் கோட்ட செயற்பொறியாளரின் சர்வாதிகார போக்கையும், அந்நியாயமான குற்றச்சாட்டுக்களையும் எதிர்த்து, டிஎன்இபி எம்ப்ளாய்மென்ட் சார்பில் இன்று அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2023ஆம் ஆண்டு தொழிலாளர் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக, மேற்பார்வை பொறியாளருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றும், தற்போது அதையே அடிப்படையாகக் கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் புகார் தெரிவித்தனர்.
2024-ம் ஆண்டில் நிர்வாகிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினதும், குறிபானையை வாபஸ் பெற மறுத்த செயற்பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக, 24 மணி நேரம் பணிபுரியும் துணை மின் நிலைய ஊழியர்களுக்குவிடுமுறை நாள்கள்,இரவு பணி ஊதியம்,
பகுதி நேர பணிக்கான முழு ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக இது தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், வழங்கப்பட்ட குறிபானையை திரும்பப் பெறும் வரை இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தொடரும் என்றும், போராட்டம் தீவிரமாகும் என்றும் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
English Summary
Protest against the misdeeds of the engineer