எகிறும் மின் கட்டணம் உயர்வு; ஜூலை 01 முதல் நடைமுறை; அதிருப்தியில் மக்கள்..! - Seithipunal
Seithipunal


ஜூலை 01-இல் இருந்து தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்தும் வகையில், புதிய கட்டண விகிதங்களை உள்ளடக்கிய விரிவான கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை தயாரித்துள்ளது.

தமிழகத்தில் வீடு உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின்வாரியமே மேற்கொள்கிறது. அதன்படி, மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. நீதிமன்ற அதிகாரம் உடைய இந்த ஆணையதில், ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.

மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறி, கடந்த 2022 செப்டம்பர், 10-இல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது தொடர்பான ஆணையில், அந்த நிதியாண்டு முதல், 2026 - 27 வரை, ஆண்டுதோறும் ஜூலை, 01-ஆம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

அதன்படி, இந்த மின் கட்டணத்தை, 06 சதவீதம் அல்லது அந்த ஆண்டின் ஏப்ரல் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஆகிய இரண்டில், எந்த சதவீதம் குறைவோ, அந்த அளவுக்கு உயர்த்த வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்கு ஏற்ப மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் குறியீட்டு எண், 3.16 சதவீதமாக இருப்பதாக, மத்திய அரசு மே மாதத்தில் தெரிவித்து இருந்தது.

ஜூலை 01-ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்த ஆணையம் முடிவு செய்து, மே மாதம் இந்த விபரத்தை வெளியிட்டனர் இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இருப்பினும் 'தற்போது, மின் கட்டண உயர்வு குறித்து, எவ்வித ஆணையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை. 

எனினும், ஆணையம், ஆணை வெளியிடும் போது, வீட்டு நுகர்வோருக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்கக்கூடாது, இலவச மின்சார சலுகைகள் தொடர வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஆகவே, வீடுகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், வீட்டிற்கான இலவச சலுகைகள் தொடரும் என்று, மின்துறை அமைச்சர் சிவசங்கர், மே, 20-இல் தெரிவித்து இருந்தார்.

குறிப்பாக தொழிற்சாலைகளுக்கான கட்டண உயர்வையும், அரசு ஏற்பதாக அறிவிக்க வேண்டும் என, தொழில் துறையினர் வலியுறுத்தினர். இந்நிலையில், நாளை மறுநாள் முதல் மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, புதிய கட்டண விகிதங்களுடன் கூடிய ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாரித்துள்ளது.

அதில், யூனிட்டிற்கு, 15 காசு முதல், 37 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்படள்ளது என்றும், கட்டணம் உயர்த்தப்பட்டதும், வீட்டு நுகர்வோருக்கு ஏற்படும் கூடுதல் செலவை, தமிழக அரசு ஏற்று, மின்வாரியத்திற்கு மானியமாக வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electricity tariff hike from July 01


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->