உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப்பணிகள்.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு!
Project works in your town searching for you District Collector Prathaps inspection
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் .பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் திருத்தணி வட்டத்திற்கு உட்பட்ட வேலஞ்சேரி ரெட்டி மோட்டூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் (23-24) கீழ் வேளாண் சாகுபடியும், திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி , அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, . மத்தூர் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள்த் துறையின் சார்பில் செயல்படுத்த பணிகள், . கொத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் , கொல்லாலகுப்பம் இருளர் குடியிருப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் PM JANMAN திட்டத்தில் பயனாளி வீடு கட்டும் திட்டப்பணிகள், திருத்தணி நகராட்சி நிர்வாக நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள், NH205 - தெக்கலூர் வரை (4.9 கி.மீ வரை நடைபெற்று வரும் சாலை பணிகள், வீரகநல்லூர் ஊராட்சியில் AGMT- II(22 +23) திட்டத்தில் நர்சரி நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ள பணிகள், சின்ன கடம்பூர் - கார்த்திகேயபுரம் வரை 6 கி.மீ சாலை பணிகள், தொடர்ந்து திருத்தணி நகராட்சி சார்பில் ரூ.12.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய திட்ட பணிகளும், எம்ஜிஆர் நகரில் ரூ 18.56 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் , ஆழ்துளை கிணறு, கழிப்பறை மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ள பணிகளை யும், பெருந்தலைவர் காமராஜர் காய்கறி வணிக வளாகத்தில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், நகராட்சி பகுதிகளில் பொது மக்களிடம் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படுகிறதா கேட்டறிந்து, பொது மக்களுக்கு தேவையான குடிநீரை உடனடியாக வழங்க வேண்டும், சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும், பொதுமக்கள் போடும் குப்பைகளை கண்ட இடங்கள் போடுவதை தவிர்க்கும் வகையில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பொன் பாடி தமிழ்நாட்டில் எல்லையில் வரும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு ஆந்திரா எல்லையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனையிட வேண்டும் மாவட்ட ஆட்சியர் மு .பிரதாப் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சீனிவாச பெருமாள், தனித்துணை ஆட்சியர்(சபாதி) பாலமுருகன், திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், வட்டாட்சியர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Project works in your town searching for you District Collector Prathaps inspection