சேலம்.! இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரபு(22). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் நவீன் உடன் இரு சக்கர வாகனத்தின் வாழப்பாடி அருகே உள்ள முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இவரது நண்பர் நவீன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Private bus twowheeler accident in salem


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->