5 மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் தொல்லை செய்த காம கொடூரன்கள்..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், கடலூர் அருகே 5 மாத கர்ப்பிணியை காரில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கணவரை பிரிந்து ஜெகன் என்பவருடன் வசித்து வருகிறார், இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை படம் பார்ப்பதற்காக திரையரங்கம் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி, பிரபாகரன் ஆகிய 4 பேர், அந்த பெண்ணை கேலி செய்ததாகவும், அந்த பெண் செருப்பை எடுத்து காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த நால்வரும் 5 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்ததன் பேரில் ஆள்கடத்தல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant lady harassment by 4 members


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->