மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்த்த செலிவியர்கள்.. கர்ப்பிணி பலி.. உறவினர்கள் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


பிரசவத்தின் போது பெண் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் , வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார்.இவருக்கு சங்கரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.  இரட்டை சிசுவுடன் நிறைமாத  கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி வரவே வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லை என கூறப்படுகிறது. இதனால், அங்குள்ள செவிலியர்களே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அதன் பின் சிறிது நேரத்திலேயே சங்கரி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சங்கரியின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மகப்பேறு மருத்துவர் இல்லாமல் பணியில் இருந்த செவிலியர்கள் மருத்துவம் பார்த்ததால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.  தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள்  அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.

அப்போது  மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்ததால் அவர்கள் சங்கரியின் உடலை பெற்று கொண்டு அங்கிருந்து சென்றனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வாழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pregnant lady death after delivery


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->