சென்னையில் பரபரப்பு சம்பவம் | மூன்று நாள் கழித்து ஏரியில் செத்து பிணமாக மிதந்த நாடக காதலன்!  - Seithipunal
Seithipunal


சென்னை : திருமண ஆசைக்காட்டி, காதல் வலையில் சிக்கவைத்து, ரூ.68 லட்சத்தை ஏமாற்றிய "நாடக காதலன்" ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், மூன்று நாள் கைலத்து அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : மதுரவாயல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது பள்ளி பருவம் முதலே நிஷாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய நிஷாந்த், இளம்பெண்ணுடன் அத்துமீறியதாக சொல்லப்படுகிறது.

மேலும், திருமணம் செய்துகொள்வதாக கூறி அந்த இளம் பெண்ணிடம் ரூ.68 லட்சத்தை பெற்று கொண்ட நிஷாந்த், திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றி வந்துள்ளார். 

இந்த நிலையில், தொழில் அதிபர் ஒருவரின் மகளுடன் நிஷாந்துக்கு கடந்த 3 ஆம் தேதி திருமணம் நடக்க இருந்துள்ளது. இதனை அறிந்த இளம்பெண், நிஷாந்த் குறித்து மதுரவாயல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நிஷாந்தை தேடி வந்தனர். இதன் காரணமாக திருமணம் நிறுத்தப்படவே, கடந்த மூன்று தினங்களுக்கு முன் நண்பர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பிவிட்டு, மனஉளைச்சலில் போரூர் மேம்பாலத்தில் இருந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளார். 

அவரின் உடலை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நிஷாந்த் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், அவர் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Porur Nishanth suicide


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->