மயிலாடுதுறை : நாட்டு வெடிகுண்டு வெடித்து விரல்களை இழந்த பிரபல ரவுடி - வாக்குமூலத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை : நாட்டு வெடிகுண்டு வெடித்து விரல்களை இழந்த பிரபல ரவுடி - வாக்குமூலத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் கலைவாணன். இவர்மீது காவல் நிலையத்தில் நான்கு கொலை வழக்குகள், ஏழு கொலை முயற்சி வழக்குகள் உள்பட மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.

அதேபோல், காவல்துறையின் ரவுடிப் பட்டியலிலும் இவருடைய பெயர் உள்ளது. இந்த நிலையில், இவர் தன் வீட்டுப் பின் பக்கத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே கலைவாணனின் பத்து விரல்களும் துண்டாகி உள்ளது. 

அதுமட்டுமல்லாமல், அவரது உடல் பகுதிகளிலும் பலத்தக் காயம் ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது உறவினர்கள் கலைவாணனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குருதி தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து கலைவாணனிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர், ”மர்மநபர்கள் மூன்று பேர் என் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். அதனை நான் என் கையால் பிடித்து அப்புறப்படுத்த முயற்சி செய்த போது வெடித்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த ரவுடி கலைவாணன் வீட்டில் நேரில் சென்று ஆய்வு நடத்தி சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

popular rowdy missing ten fingers for country bomb explosion in kuttalam mayiladuthurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->