பொங்கல் பயணிகள் ஏமாற்றம்: நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில்கள் டிக்கெட்டுகள் சில நிமிடத்தில் விற்று முடிந்தது! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை அனுபவிக்க சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் திரும்பி சென்னை வருவதற்காக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்கியுள்ளது. இந்த நிலையில், வரும் 18-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை-தாம்பரம் இடையே ஒரு வழி சிறப்பு ரெயில் (வண்டி எண் 06178) இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் மதியம் 1 மணிக்கு நெல்லையை விட்டு புறப்பட்டு, மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரத்திற்கு வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது; ஆனால் சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று முடிந்ததால், பயணிகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர்.

பொங்கல் விடுமுறை முடிந்து ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகள் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ள நிலையில், பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடுதல் சிறப்பு ரெயில்களை விரைவில் இயக்க வேண்டும் என ரெயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பயணிகள் சீராக மற்றும் பாதுகாப்பாக செல்லும் வகையில், மேலதிக சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்படுமா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pongal travelers disappointed Tickets Nellai Tambaram special trains sold out few minutes


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->