தமிழர் திருநாளில் ரஜினிகாந்த் உரையால் உற்சாகம்...! - விவசாயிகளின் நலமே முதுகெலும்பு! - Seithipunal
Seithipunal


தமிழர் திருநாளான தைப்பொங்கல் இன்று தமிழகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, புதுப்பானையில் பொங்கல் செய்து, தைத்திருநாளின் மகிழ்ச்சியில் மக்கள் ஈரக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை போய்ஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பாக அவரது ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், வீட்டில் இருந்து வெளியே வந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், செய்தியாளர்களுடன் உரையாடிய அவர் கூறியதாவது,“எல்லோரும் நல்வாழ்த்தில் இருக்க வேண்டும்.

விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் நலமாக இருக்க வேண்டும். விவசாயிகள் நல்வாழ்வு பெறும்போது மட்டுமே நாடு வளர்ச்சி அடையும், மக்கள் செழிப்புடன் வாழ முடியும்” என்று அவர் வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enthusiasm sparked by Rajinikanth speech Tamil festival day Farmers welfare backbone


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->