தருமபுரி || பேரூராட்சி ஊழியரை அடித்து உதைத்து அராஜகத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர்கள்.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி அருகே பேரூராட்சி ஊழியரை திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பொம்மிடி முதல் நிலை பேரூராட்சியில் வரி வசூலிக்கும் பணியில் இருந்து வருபவர் ஆறுமுகம். 45 வயதாகும் ஆறுமுகம் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் ஆறுமுகம் பணி செய்து கொண்டிருக்கும் போது, பொ,மல்லாபுரம் பொம்மிடியை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி திமுக துணைத்தலைவர் மோகன் குமார் (வயது 45) மற்றும் முன்னாள் திமுக நகர செயலாளர் சேகர் (வயது 65) ஆகிய இருவரும் வந்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு ஆறுமுகம் உரிய மரியாதை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர்கள் இருவரும், ஆறுமுகத்தை அடித்து உதைத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்நேரம், ஆறுமுகத்தின் சக ஊழியர்கள் திமுக பிரமுகர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் செயல் அலுவலருக்கு ஆறுமுகம் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும், பொம்மிடி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரூராட்சி ஊழியரை திமுக பிரமுகர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pommidi corporation staff attacked dmk members


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->