மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 40 வயது கூலித்தொழிலாளிக்கு வலைவீச்சு...! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 40 வயது கூலித்தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பொம்மதாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சக்காரலப்பா(40). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் இதுகுறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

இதற்கிடையே, இதையறிந்த சக்காரலப்பா தலைமறைவானார். இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவான சக்காரலப்பாவை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police looking for A 40 year old laborer was sexually harassed by a mentally challenged girl in Krishnagiri


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->