திருவள்ளூர்: நகக்கீறல்களுடன் வாலிபர் மர்ம மரணம்.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் மர்மமான முறையில் வாலிபர் உயிரிழந்த கடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ்(29). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காயத்ரி(27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கழுத்தில் நகக்கீறல்களும், காயங்களுடன் யுவராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து யுவராஜின் தந்தை, காவல் நிலையத்தில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மருமகளே தனது மகன் சாவுக்கு காரணம் என்று புகார் கொடுத்தார்.

இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், யுவராஜை கொலை செய்தார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து அவரது மனைவியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police investigation for Mysterious death of young man with scratches in tiruvallur


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->