சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தாயின் கள்ளக்காதலன்..! ஆனைமலையில் அதிர்ச்சி...! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் தாயின் கள்ளக்காதலன் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் பதினோராம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி. இவரது தந்தைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் தாய்க்கும், வேட்டைக்காரன் புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்(35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் தாய் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சுரேஷ் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால் சிறுமி கூச்சலிடவே, சுரேஷ் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரியின் அடிப்படையில் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation for mother illegal lover Tried to rape the girl in anaimalai kovai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->