வலிமை டிக்கெட் அதிக விலைக்கு விற்றதால் ரசிகர் செய்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவையில் கங்கா திரையரங்கில் இயங்கி வருகிறது. இந்த திரையரங்கில் கடந்த 24ம் தேதி வலிமை சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.  அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளார்.  இதனால், ஒருவர் காயமடைந்தார். இதனை அடுத்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

நெல்லையை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அஜித் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஒருவர் அதிக விலைக்கு டிக்கெட்டை விற்பனை செய்ததாகவும் இதனால், ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, அவர் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police have arrested a youth who threw a petrol bomb at a theater


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->