கிளற கிளற வெளிவரும் போதை கும்பல்: நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தது ஏன்..?
Police explain why they arrested actor Krishna for drug use
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்ததில் பல திரை பிரபலங்களும் சிக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது செய்தது குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
கிருஷ்ணாவை தீவிர விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதோடு, நண்பர்களுக்கும் நடிகர் கிருஷ்ணா அளித்துள்ளதாகவும், அதனை விற்பனை செய்யும் கெவினும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
-w8y2r.png)
அத்துடன், குறித்த வழக்கு தொடர்பாக நடந்த விசாரணை தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும், ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது என்றும் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் ஜெஸ்விர் என்ற கெவின் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவரிடம் இருந்து கொக்கைன் 0.5 கிராம், மெத்தம்பெடமைன்- 10.30 கிராம், எம்டிஎம்ஏ 02.75 கிராம், ஓஜி கஞ்சா -2.40 கிராம், கஞ்சா -30 கிராம், எடை இயந்திரம் 02, லேப்டாப்-01, மொபைல்போன் -01, ரூ.45,200 ரொக்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
-gcqax.png)
கெவினிடம் இருந்து, நடிகர் ஸ்ரீகிருஷ்ணா, போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதுடன், அதனை நண்பர்களுக்கு பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. அத்துடன், அவர், போதைப்பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து அது தொடர்பாக கருத்து பரிமாற்றங்கள், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம், நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இவர்களுடைய வங்கி பணிபரிவர்த்தனை மற்றும் இதுவரை பயன்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடந்து வருவதாக போலீசாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Police explain why they arrested actor Krishna for drug use