திரண்ட போலீசார்! மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூடு...! 4 பேர் பலி! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூர் மாவட்டத்திலுள்ள மோங்ஜாங் கிராமத்தில் மர்ம நபர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இன்று மதியம் 2 மணியளவில் மோங்ஜாங் கிராமம் அருகே காரில் 4 பேர் பயணம் செய்துள்ளனர். அச்சமயம் திடீரென கார் மீது மர்ம நபர்கள் பயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இதில் ஒருவர் 60 வயது முதிய பெண் ஆவார்.இந்த நிகழ்விற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அப்பகுதிக்கு காவலர்கள், கூடுதல் பாதுகாப்புப்படையினர் விரைந்துள்ளனர்.மேலும் இதுகுறித்த விரிவான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police deployed Firing in Manipur 4 killed


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->