பூட்டிய வீட்டுக்குள் கைவரிசை காட்டிய திருடர்கள்.! 3 பேரை மடக்கிப் பிடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய 3 திருடர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர். மேலும் மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தற்பொழுது சென்னையில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அச்சரப்பாக்கத்தில் உள்ள சந்திரசேகரனின் வீட்டின் பூட்டை உடைத்து இன்று அதிகாலை, மர்ம கும்பல் ஒன்று வீட்டிலிருந்து பொருட்களை திருடியுள்ளனர்.

இதையடுத்து பூட்டப்பட்ட வீட்டிலிருந்து சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அச்சரப்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துரிதமாக செயல்பட்டு சந்திரசேகரின் வீட்டுக்குள் இருந்த 3 திருடர்களை மடக்கி பிடித்தனர். ஆனால் அவர்களுடன் இருந்த மேலும் 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

இந்நிலையில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த செல்வா, பிரான் சிஸ்ராஜ் மற்றும் மூவசரன் பேட்டை பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police caught 3 thieves who stole a house in Chengalpattu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->