வாடகைக்கு குடியிருந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய தம்பதி... விசாரணையில் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


வயதான தம்பதி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில்  வீட்டில் குடியிருந்தவர்களே ஈடுப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், கண்டனுரில் வசித்து வருபவர் தட்சணா மூர்த்தி. ஓஉவு பெற்ற தனியார் நிறுவன ஊழியரான இவர் மனைவி விசாலாட்சி உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் வயதான தம்பதியை கட்டி போட்டு அவர்கக் வீட்டில் இருந்த 25 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் 2 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த தம்பதி வீட்டில் வாடகைக்கு வசித்திருந்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களிடம் கிடுக்குபிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவர்கள் திட்டமிட்டு அந்த வயதான தம்பதியிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டு பாக்கியலட்சுமி கணவர் ராமு பாக்கியலட்சுமியின்  தோழி மஞ்சுளா மஞ்சுளாவின் மகன் அசோக்குமார் இவரது கூட்டாளிகள் மகேஷ் அம்சகுமார் பிரபுராஜ்,  ஐங்கரன் ஆகியோர் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க வைர நகைகள் மற்றும் ரொக்கத்தை மீட்டனர். மேலும், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrested the robbers near Sivagangai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->