அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்த இளைஞர்கள் கைது...! - Seithipunal
Seithipunal


நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பெண்ணிடம் பணம் பறித்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டியை சேர்ந்தவர் வசந்தன் இவரது மனைவி சாந்தா. இவர் புருணை நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த பள்ளியை நடத்தி வந்த தஞ்சையை சேர்ந்த முபாரக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அவர்கள் இருவரும் தனிமையில் இந்த போது அவருக்கே தெரியாமல் முபாரக் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

இந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. மே லும் அவரது நண்பர்களான தினேஷ் மற்றும் மின்நகரை இந்த தினேஷ் இருவரும் மிரட்டி அவரிடம் பணம் பறித்துள்ளனர்.

தொடர்ந்து இதேபோல் மிரட்டி பணம் பறித்ததாக மன உளைச்சலுக்கு ஆளான அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முபாரக் தினேஷ் மற்றும் மின் நகரை சேர்ந்த தினேஷ் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police arrested 3 man


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->