பலருடன் உல்லாசம்., பலியான பிஞ்சு., இன்ஸ்டா ராணியின் வெறிச்செயல்.!  - Seithipunal
Seithipunal


நீலகிரி அருகே கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாயை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை அடுத்த வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரின் மனைவி கீதா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கார்த்தியை விட்டுப் பிரிந்த கீதா, தனது ஒரு வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் கீதாவின் பராமரிப்பில் இருந்த ஒரு வயது குழந்தை கடந்த 15ஆம் தேதி மர்மமான முறையில் திடீரென இறந்துள்ளது. குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி உதகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், குழந்தையின் பிரேத பரிசோதனை முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைக்கு அதிக அளவில் உணவு ஊட்டியும், மதுபானம் கொடுத்துள்ளதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதனையடுத்து கீதாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கார்த்திக்கை திருமணம் செய்த கீதாவுக்கு, கார்த்திக் மட்டுமல்லாமல் பலருடன் தொடர்பு இருந்துள்ளது.

கார்த்திக்கை விட்டு பிரிந்து ஒரு வருட காலமாக ஒரு வயது மகனுடன் இவர் வாழ்ந்து வந்த கீதா, இந்த ஒரு வருடத்தில் பலருடன் இவர் தொடர்பில் இருந்ததாகவும், பலருடன் உல்லாசத்தில் இருந்ததாகவும், அவர் உல்லாசமாக வாழ்வதற்கு இந்த ஒரு வயது ஆண் குழந்தை இடையூறாக இருந்ததால், குழந்தையை கொலை செய்ததாக அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் கீதாவை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

POLICE ARREST UTHAKAI KEETHA


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->