பிளஸ்-1 மாணவி 5 மாத கர்ப்பம்.! வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு.!
Police are looking for the youth who made the 11th class girl 5 months pregnant in Thanjavur
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவியை 5 மாத கர்ப்பமாகிய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி மேல காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சந்தோஷ் (23), 15 வயதுடைய 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்பு மாணவியுடன் நெருங்கி பழகிய சந்தோஷ் திருமண ஆசை வார்த்தைகள் கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் திடீரென மௌனவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து மருத்துவமனைக்கும் விரைந்து வந்த போலீசார் மாணவியிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தோஷை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Police are looking for the youth who made the 11th class girl 5 months pregnant in Thanjavur