பஹல்காம் தாக்குதல் - கண்விழித்து கண்காணித்த பிரதமர் மோடி.!!
pm modi watch operation sindoor attack
ஜம்மு காஷ்மீரின் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் எல்லை மீறிய தாக்குதலுக்கு நள்ளிரவு முதல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரைக்கும் பாகிஸ்தானின் கராச்சி, லாகூரை குறிவைத்து 25 டிரோன்களை கொண்டு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுவதும் நடந்த தாக்குதல்களை கண் விழித்து நொடிக்கு நொடி கண்காணித்தார். மேலும், பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலை இந்தியா முறியடித்ததை நொடிக்கு நொடி கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். அதிகாரிகளும் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து தகவல்களை பிரதமர் மோடிக்கு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
pm modi watch operation sindoor attack