#BREAKING || சற்றுமுன் பிரதமர் மோடி போட்ட ட்வீட்., பெரும் சோகத்தில் அதிமுக தொண்டர்கள்!
PM MODI MOURNING TO MINISTER DURAIKANNU DEATH
கொரோனா தொற்று காரணமாக தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று (31.10.2020) இரவு 11.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவித்து.
சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் திரு உருவப் படத்துக்கு மலர் தூவி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக ஆளுநர், தெலுங்கானா மாநில ஆளுநர் உள்ளிட்டோரும் அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு, பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சமுதாய சேவைக்கும், விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைக்கவும் பாடுபட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில்." என்று பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்
English Summary
PM MODI MOURNING TO MINISTER DURAIKANNU DEATH