நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் 5 மணி நேரம் மின்தடை!
Planned Power Outage Tomorrow Charge Your Devices Chennai
சென்னையில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (11.02.2026) ஒரு சில முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின் தடை விபரங்கள்:
நேரம்: காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை (பராமரிப்பு பணிகள் விரைவாக முடிந்தால் மின்சாரம் முன்னரே வழங்கப்படும்).
பாதிக்கப்படும் பகுதிகள்:
1. நங்கநல்லூர் (Nanganallur Area):
ஷீலா நகர், ஐஸ்வர்யா தெரு, ஏரிக்கரை தெரு, ராமகிருஷ்ண ராஜு நகர், ஏஜிஎஸ் காலனி, பாலாஜி நகர், சிவப்பிரகாசம் நகர், சங்கரா நகர், சதாசிவம் நகர், ராம் குமார் தெரு, அகத்தியர் தெரு, மணிகண்டன் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
2. ராயபுரம் (Royapuram Area):
எம்.சி.ரோடு, கல்லறை சாலை, பி.வி.கோவில், ராமன் சாலை, வெங்கடாசலம் தெரு, ஆடம் தெரு, மாதா சர்ச் தெருக்கள் (கிழக்கு, மேற்கு, தெற்கு), சிங்காரா கார்டன், மீனாட்சி அம்மன் பேட்டை, கல்மண்டபம் சாலை, அம்மன் கோவில் 1 முதல் 8-வது தெருக்கள் வரை மற்றும் சோலையப்பன் தெரு பகுதிகள்.
சிறு குறிப்பு: லேப்டாப், மொபைல் போன் மற்றும் பவர் பேங்குகளை இன்றே சார்ஜ் செய்து கொள்வது நல்லது. இல்லையெனில், 5 மணி நேர 'டிஜிட்டல் விரதம்' இருக்க வேண்டிய சூழல் வந்துவிடும்!
English Summary
Planned Power Outage Tomorrow Charge Your Devices Chennai