இலவச வாக்குறுதிக்கு கட்டுப்பாடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு…! - தேர்தலுக்குப் பிறகு விசாரணை
Petition Supreme Court seeking restriction free promises Hearing after election
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இலவச திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை வெளியிடுவதை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டுவில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் சார்பில் வழக்கறிஞர்கள் ஜெய சுகின் மற்றும் நரேந்தர் குமார் வர்மா தாக்கல் செய்த மனுவில், தேர்தலுக்கு முன் அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதிகள் மாநில அரசுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துகின்றன எனத் தெரிவித்துள்ளது.

இத்தகைய திட்டங்களால் ஏற்படும் செலவுகள், அதற்கான நிதி ஆதாரங்கள் மற்றும் செயல்திறன் குறித்து அரசியல் கட்சிகள் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் இவ்வகை இலவச அறிவிப்புகளைத் தடுக்க மத்திய அரசுக்கும் இந்திய தேர்தல் ஆணையம்க்கும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதற்காக தேர்தல் நடத்தை விதிகளில் மாற்றம் கொண்டு வரவும், இலவச திட்டங்களின் சாத்தியக்கூறுகளை நிதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளின் நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழுவின் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கை எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி, “கேரளாவில் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற மனு தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் வருவதாகத் தெரிவித்து மீண்டும் மனு தாக்கல் செய்கிறீர்கள். இவ்வேளையில் இதை அவசரமாக ஏற்க இயலாது. தேர்தல் முடிந்த பின் விசாரிக்கலாம்,” எனக் கூறி, வழக்கை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.
English Summary
Petition Supreme Court seeking restriction free promises Hearing after election