சிறையிலேயே அபிராமிக்கு இறுதி முடிவு..? வழக்கறிஞர் ரூபத்தில் வந்த எமன்: காம களியாட்டங்களுக்கு கடைசியில் இது தான் கதி.!
சென்னை குன்றத்தூரில் வசித்து வந்த அபிராமி என்ற பெண், சுந்தரம் என்பவருடன் நீண்ட நாட்களாக கள்ளக்காதல் கொண்டுள்ளார்.
சென்னை குன்றத்தூரில் வசித்து வந்த அபிராமி என்ற பெண், சுந்தரம் என்பவருடன் நீண்ட நாட்களாக கள்ளக்காதல் கொண்டுள்ளார்.
மேலும் அவருடன் வாழ ஆசைப்பட்ட அபிராமி தனது குழந்தைகள் இடையூறாக இருப்பார்கள் என எண்ணி தன் இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.
பின்பு தனது கணவரை விட்டுவிட்டு சுந்தருடன் வாழ வீட்டை விட்டு ஓடி உள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அனைவரையும் அதிர வைத்துள்ள நிலையில் அபிராமிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கண்டன குரல் ஒலித்து வருகிறது.
தற்போது தனது இரு பிள்ளைகளை கொலை செய்த அபிராமி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அபிராமிக்கு எதிராக வழக்கறிஞர் தமிழ்வேந்தன், சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில்
புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்தப் புகார் மனுவில் எனக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தவறான நட்பால் கொலைகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றன.
குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டுமே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுபோன்ற குற்றங்கள், சமூக சீர்கேட்டுக்குக் காரணமாக உள்ளது. சமீபத்தில் குன்றத்தூரில் அபிராமி என்ற பெண், தன்னுடைய இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளார்.
எனவே, இந்தக் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு போலீஸார் தடுக்க வேண்டும். எனவே, குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. கைதானவர்கள் சிறைக்குள் இருக்கும் நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
English Summary
petition-against-abirami-in-chennai-police-station