அம்மிக்கல் ,ஆட்டுக்கல் உடைக்க அனுமதி தர வேண்டும்..கல் உடைக்கும் தொழிலாளர்கள் வலியுறுத்தல்!
Permission should be granted to break stones at Ammikal and Aattukkal Demand from stone-breaking workers
போயர் சமுதாய மக்களின் குலத் தொழிலான கட்டுக்கள் சக்கை மற்றும் வேலிகள் தூண்கள் அம்மிக்கல் ஆட்டுக்கல் உடைக்க அனுமதி தர வேண்டுமென வலியுறுத்தி கல் உடைக்கும் தொழிலாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் பண்ணவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர், இவர்கள் இன்று திரளாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தமிழ்நாடு போயர் பேரவை மாநில பொதுச் செயலாளர் பெரிய பொண்ணு தலைமையில் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.
இந்த மனுவில்,தமிழ்நாட்டில் பல லட்சம் ஏக்க நிலங்களில் இருந்த பாறைகளை உடைத்து நிலத்தை சீர்படுத்தி கிணறு வெட்டி கொடுத்து விவசாயம் செழிக்க பாடுபட்டு வருகிறோம், ஆனால் போயர் சமூக மக்கள் பட்டா நிலத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கல் உடைக்கவும் பொதுமக்கள் வீடு கட்டும் நிலத்தில் இருக்கும் பாறைகளை உடைக்கவும் அந்த கற்களை விற்பதற்கும் அனுமதி தர வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.
மனு கொடுத்த பின்னர் நிர்வாகிகள் பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது,
தமிழகத்தில் 40 லட்சம் போயர் சமூக மக்கள் வாழ்கின்றோம்.இவர்களில் 90% பேர் கல் உடைக்கும் தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள் இந்த தொழில் குலத் தொழிலாகும் சில ஆண்டுகளாக கல் உடைக்கும் தொழிலுக்கு பேக்கேஜ் டென்டராக கொடுத்து விடுகிறார்கள் இதனால் கல் உடைக்கும் தொழில ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம் பேக்கேஜ் டெண்டர் எங்களால் எடுக்க முடியாது ஆயிரம் வருடங்களாக மாலையை உடைத்து கல் எடுத்து தொழில் செய்து வந்தோம் எங்களது குழல் தொழிலை காக்க வேண்டும் இதற்கு கல் உடைக்க அனுமதி தர வேண்டும் சிறிய பாறைகள் உடைக்க அனுமதி தர வேண்டும் இந்த கற்களை உடைத்து விற்கவும் அனுமதி தர வேண்டும் குழுவாக சேர்ந்து செய்யுங்கள் என அதிகாரிகள் கூறுகிறார்கள் ஆனால் குழுவாக சேர்ந்து எங்களால் செய்ய முடியாது எங்களுக்கு சிறப்பு சலுகையாக பட்டா நிலங்கள் மற்றும் விவசாய நிலையில் உள்ள சிறிய பாறைகள் உடைத்து தொழில் செய்ய வழிவகை செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Permission should be granted to break stones at Ammikal and Aattukkal Demand from stone-breaking workers