பெரம்பலூர் : பாலியல் தொல்லை., கத்தியை காட்டி மிரட்டல்., பிரபல அரசியல் கட்சி பிரமுகர் அதிரடியாக கைது.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், அதிமுக பிரமுகரை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் .

பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான பாலியல் அத்துமீறல்கள் உலகம் முழுவதுமே அதிகரித்து வருகிறது. 

வளர்ந்து வரும் இந்த நவீன உலகத்தில் பெண்பிள்ளைகளை கவர்ச்சி காட்சி பொருளாக காட்டி வரும் சினிமா துறை காரணமாக இந்த அத்து மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த மாதம் பாலியல் தொல்லை காரணமாக, பள்ளி மாணவிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதா? என்று எண்ணும் அளவிற்கு அச்சம் உண்டாக்கிய போதே, கடந்த வாரம் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை காரணமாக மேம்பாலத்தின் மீது இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி எனும் கிராமத்தில், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் அதிமுக நகரச் செயலாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த அதிமுக நகர செயலாளர் வினோத், கத்தியை காட்டி அந்த பெண்ணை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அரும்பாவூர் போலீசார் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perambalur admk member vinoth arrest


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->