5 தலைமுறைக்கு பிறகு கோவிலுக்குள் சென்ற மக்கள்..நெகிழ்ச்சி தருணம்..! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் 5 தலைமுறைகளாக கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்களை மாவட்ட ஆட்சியர் அழைத்துச் சென்று தரிசனம் செய்தார். இது சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் தாயூர் கிராமம் அருகே உள்ள வேங்கை வயல் பகுதியில் பழங்குடியினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த வேங்கை வயலில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே ஆகியோர் விசாரணை நடத்தினர்.

கலெக்டரிடம் பேசுகையில், ஐயனார் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுத்து, ஐந்து தலைமுறையாக தங்களை ஒதுக்கி வைப்பதாக, அவர்களது துக்கத்தை தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த கலெக்டர் கவிதா ராமு நடவடிக்கை எடுத்தார். 

முன்னதாக, கோவில் பூசாரியான, வேறு சமூகத்தை சேர்ந்த ராஜன் என்பவரின் மனைவி சாமி தனது உடம்பில் வந்ததது போல் ஆடி, ஆதிதிராவிடர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கலெக்டர், அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People entered the temple after 5 generations


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->