இண்டிகோ விமானத்தில் அவசரகால கதவைத் திறந்த பயணியால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி சென்னை விமான நிலையத்தில் தனியார் விமானமான 'இண்டிகோ' என்ற விமானம் திருச்சி செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த விமானத்தில் திருச்சி செல்லும் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணி தவறுதலாக வலதுபக்கத்தில் உள்ள அவசரகால கதவை திறந்து விட்டார். இதைப்பார்த்த விமான ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து, அவசரகால கதவு சரியாக பொருத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த விமானத்தில் அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனைகளால் விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து, இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, "இந்த செயலில் ஈடுபட்ட பயணி  உடனடியாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்று தெரிவித்துள்ளது.

இதேபோன்று, விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகமும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, "விமான பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passanger open emergency door in indigo airplane


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->