மதுரை: பெண் சிசு கொலை வழக்கில் திருப்பம்.. தந்தையே கொலை செய்த அவலம்..! - Seithipunal
Seithipunal


பெண் சிசு குழந்தை மரணமடைந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், பெரியகட்டளை பகுதியை சேர்ந்தவர் முத்துபாண்டி . இருவருக்கு திருமணமாகி கௌசல்யா என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

அவர்களின் மூன்றாவது குழந்தை கடந்த சில நாட்களுக்கும் முன் இறந்ததால் அவர்கள் வீட்டின் அருகே புதைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டனர்.  பிரேதபரிசோதனை அறிக்கையில் குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கொலைவழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த முத்துபாண்டி மற்றும் கௌசல்யாவை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவெ இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது பெண் குழந்தையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவதன்று, தகராற்றில் ஆத்திரத்தில் குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்ததாகவும் அதனை மறைக்க அக்கம்பக்கதினரிடம் குழந்தை உடல்நல குறைவால் இறந்து விட்டதாக தெரிவித்தாகவும் தெரிவித்தனர். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parents arrested in baby girl murder case


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->