தொடர் மின்தடை., போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்.! பேச்சுவார்த்தையின் போது ஊராட்சிமன்ற தலைவர் மண்டை உடைப்பு..!! - Seithipunal
Seithipunal


சாலை மறியலின் போது ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம்,  பாத்தம்பட்டி பகுதியில் தொடர் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிபட்டு வந்துள்ளனர். பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அந்த பகுதி மக்கள் மிந்தடையை கண்டித்து சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. இதனை அறிந்து அந்த பகுதிக்கு வந்த பாத்தம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர்  செல்வராஜ் சோழன் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது போராட்டகாரர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனை அடுத்து கார்த்திக் ராஜ் என்பவர் ஊராட்சிமன்ற தலைவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் அவர் காயமடைந்தார் உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panchayat leader skull fracture during negotiations Near pudukkottai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->