சென்னை உள்பட 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
Orange alert 19 districts including Chennai
சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
மேலும் தமிழகத்தில் இன்று, நாளை பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி உள்பட 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
English Summary
Orange alert 19 districts including Chennai