காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; கர்ப்பிணி காதலி,காதலன் எடுத்த சோக முடிவு!
Opposition from parents to love Pregnant girlfriend boyfriend takes a sorrowful decision
காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனும், கர்ப்பிணி காதலியும் தனித்தனியாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பத்தூர் அருகே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் கோகுல் மற்றும் ஜோலார்பேட்டை அருகே உள்ள காவேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 20 வயது மாணவி தரணி ஆகிய இருவரும் பெங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங் படித்து வந்தனர்.
இந்நிலையில் கோகுல், தரணி ஆகியோர் ஒரே வகுப்பில் படித்த நிலையில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பல இடங்களில் ஒன்றாக சுற்றியதால் தரணிகர்ப்பிணியானார்.இதையடுத்து கோகுலின் காதலை பெற்றோர் ஏற்காமல் எதிர்த்ததால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோகுல் பெங்களூருவில் இருந்து ரெயிலில் ஆம்பூருக்கு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காதலி கர்ப்பிணியான தரணி அதிர்ச்சி அடைந்த அவர் நேற்று அதிகாலை வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் பாய்ந்தார்.இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் சிதைந்து பலியானார்.அவரது வயிற்றில் இருந்த 9 மாத ஆண் சிசுவும் இறந்து கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனும், கர்ப்பிணி காதலியும் தனித்தனியாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Opposition from parents to love Pregnant girlfriend boyfriend takes a sorrowful decision