ஊட்டி மலர் கண்காட்சி.. 2 நாளில் 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்! - Seithipunal
Seithipunal


ஊட்டி மலர் கண்காட்சி தொடங்கிய 2 நாளில் 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாடுகள் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்  ஏராளமான சுற்றுலா பயணிகள்வந்து உதகை அழகை ரசித்து செல்கின்றனர்.

இந்தநிலையில் கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில்  ஆண்டுந்தோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.அந்தவகையில் இந்த ஆண்டு தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 127-வது மலர் கண்காட்சியை  15-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கண்காட்சியில்,  40 ஆயிரம் வண்ண மலர் மாடங்கள் இடம் பெற்றுள்ளன.ரோஜா, சாமந்தி, கார்னேசன் போன்ற 2 லட்சம் மலர்கள் மூலம்  பண்டைய அரசர் கால அரண்மனை அமைப்பும் பிரமிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

4 ஆயிரம் மலர்த்தொட்டிகள், 35 ஆயிரம் சாமந்தி, ரோஜா பூக்கள் மூலம் கல்லணைகாட்சிப்படுத்தப்பட்டுள்ளது.கண்காட்சி தொடங்கியதை அடுத்து ஊட்டி அரசு தாவிரவயில் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ஊட்டி மலர் கண்காட்சி தொடங்கிய நாளில் 14 ஆயிரத்து 5 பேரும், 2-வது நாளான நேற்று 16 ஆயிரத்து 580 பேரும் என 2 நாட்களில் 30 ஆயிரத்து 585 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.வார விடுமுறை நாட்களான இன்றும், நாளையும், இந்த எண்ணிக்கை அதிகமாகும் என அவர்கள் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ooty Flower Show 30,000 people enjoyed it in 2 days


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->