புதுக்கோட்டை அருகே நடைபெற்ற "மஞ்சுவிரட்டு போட்டி"... மாடு முட்டி ஒருவர் பலி..!
One person died after being hit by a bull in Pudukkottai near
புதுக்கோட்டை மாவட்டம் கீழவேகுப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வருடம்தோறும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொன்னமராவதி உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழவேகுப்பட்டியில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இந்நிலையில், மஞ்சுவிரட்டு போட்டியில் எதிர்பாராத விதமாக 40 வயதுடைய பெயிண்டர் சிங்கார ராவணன் என்பவரை காளை முட்டியது. இதில் சிங்கார ராவணன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்த மருத்துவ குழுவினர் பலத்த காயம் அடைந்த சிங்கார ராவணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து சிங்கார ராவணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
One person died after being hit by a bull in Pudukkottai near