நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்து - வேன் - பயணிகளின் நிலை என்ன?  - Seithipunal
Seithipunal


நேற்று அதிகாலை சென்னை அண்ணாநகரில் கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையில் சென்றவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். 

இந்த நிலையில் இன்று காலை சென்னை மீனம்பாக்கம் சிக்னலில் அரசு பேருந்தும், தனியார் நிறுவன வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது. 

இதனால், அதிலிருந்த தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக அரசு பேருந்தில் பயணம் செய்த 40 பேரும் எந்த காயங்களுமின்றி உயிர் தப்பினர்.

இதைப்பார்த்த அந்த வழியாகச் சென்ற சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தாம்பரம்- கிண்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one man died and two peoples injured for accident in chennai


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->