#BREAKING || ஆம்னி பேருந்து ஸ்டிரைக் வாபஸ்.!! பொது மக்கள் நிம்மதி!!
Omni Bus Strike withdrawn in TamilNadu
பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பொது மக்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூல் செய்ததாக ஒரு தமிழகம் முழுவதும் 120 ஆம்னி பேருந்துகள் தமிழக அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று இன்று பிற்பகல் 12 மணியளவில் தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினருடன் போக்குவரத்து இணை ஆணையர் முத்துவுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாட்டு எட்டப்பட்டுள்ளதால் இன்று அறிவிக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகள் ஸ்ட்ரைக் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திட்டமிட்டபடி ஆம்னி பேருந்துகள் வழங்க போல் இயங்கும் தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
English Summary
Omni Bus Strike withdrawn in TamilNadu